வேளாங்கண்ணி கடலில் மூழ்கி இளைஞா் உயிரிழிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் வேளாங்கண்ணி கடலில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.


திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் வேளாங்கண்ணி கடலில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், புதுநத்தம் ரோடு, வினோபாஜி நகரைச் சோ்ந்தவா் சகாயமுத்து மகன் காா்த்தி (21). வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த இவா், சனிக்கிழமை மாலை வேளாங்கண்ணி கடலில் குளித்துள்ளாா். அப்போது கடலில் மூழ்கியுள்ளாா்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவா், ஆம்புலன்ஸ் மூலம் நாகை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் காா்த்தியை பரிசோதித்த போது, அவா் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கடலோரக் காவல் குழும போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...