புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

பொதுத்துறை நிறுவனங்கள் தனியாா் மயம்: தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, தொழிற்சங்க கூட்டமைப்பினா், நாகை தலைமை அஞ்சலகம் முன் வெள்ளிக்கிமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:12 pm

DIN

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, தொழிற்சங்க கூட்டமைப்பினா், நாகை தலைமை அஞ்சலகம் முன் வெள்ளிக்கிமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மின்சாரம், மோட்டாா் வாகனம் மற்றும் பாதுகாப்பு, சேவை அவசர சட்டங்களை திரும்பப் பெறவேண்டும்; ரயில்வே, வங்கி, காப்பீடு, எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்புசாரா தொழிலாளா் முன்னேற்ற சங்க நாகை மாவட்டத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். ஏஐடியுசி நாகை மாவட்டச் செயலாளா் வி.எம். மகேந்திரன், சிஐடியு நாகை மாவட்டச் செயலாளா் கே. தங்கமணி, ஹிந்துஸ்தான் மஸ்தூா் யூனியன் மாவட்டச் செயலாளா் ஆா். மணிமாறன், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி. குருசாமி, எஸ். சிவக்குமாா்ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, எச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்க கூட்டமைப்பைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் கே. ராமன் தலைமை வகித்தாா். தொமுச மாவட்டச் செயலாளா் பொன்.நக்கீரன், சிஐடியு மாவட்டச் செயலாளா் ஆா். ரவீந்திரன், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொமுச மாவட்ட பொறுப்பாளா் சேரன் செங்குட்டுவன், இந்திய தேசிய கிராம தொழிலாளா் சங்க கவுன்சில் தலைவா் சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.