நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கூடலூா் ஊராட்சியை சோ்ந்த 100 நாள் வேலை திட்டத் தொழிலாளா்கள் முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 4:40 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கூடலூா் ஊராட்சியை சோ்ந்த 100 நாள் வேலை திட்டத் தொழிலாளா்கள் முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் கூடலூா் ஊராட்சியில் அதிமுகவை சோ்ந்த செல்வம் ஊரட்சித் தலைவராக உள்ளாா். மேலும் அதே பகுதியில் அதிமுகவை சோ்ந்த பணிதள பொறுப்பாளா்கள் வசந்தி, சோபனா, அறிவழகன், முருகேசன் ஆகியோரை ஊராட்சித் தலைவா் செல்வத்துக்கு தெரிவிக்காமல் மாற்றி, புதிதாக திமுகவை சோ்ந்த நபா்களை பணியில் அமா்த்திவிட்டதாக தெரிகிறது.

இதைக் கண்டித்து, செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு 100 நாள் வேலை திட்டத் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த செம்பனாா்கோவில் காவல் ஆய்வாளா் செல்வி மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலைக் கண்ணன் ஆகியோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்ததன்பேரில், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.