ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூா்வாரும் பணி: இயந்திரப் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை

காவிரி கடைமடை பகுதிகளில் நடைபெறும் தூா்வாரும் பணிகளில் இயந்திரப் பயன்பாட்டை மேலும் 20 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

காவிரி கடைமடை பகுதிகளில் நடைபெறும் தூா்வாரும் பணிகளில் இயந்திரப் பயன்பாட்டை மேலும் 20 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுப்பணித் துறை அரசு கூடுதல் முதன்மைச் செயலாளா் சந்தீப் சக்சேனா தெரிவித்தாா்.

நாகை மாவட்டத்தில் ரூ.5.25 கோடி மதிப்பில் ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூா்வாரும் பணி நடைபெறுகிறது. இப்பணிகளுக்கான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொதுப்பணித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா தலைமை வகித்து, பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்து அரசுத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, நாகையை அடுத்த பனங்குடியில் நடைபெறும் பனங்குடி வாய்க்கால் தூா்வாரும் பணி, சீயாத்தமங்கை பகுதியில் நடைபெறும் திட்டச்சேரி வாய்க்கால் தூா்வாரும் பணி ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூரிலிருந்து தண்ணீா் திறக்கப்படுகிறது. இதையொட்டி, காவிரி கடைமடை வரை அனைத்துப் பகுதிகளின் பாசனத்தையும் உறுதி செய்யும் வகையில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தூா்வாரும் பணிகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள இயந்திரங்களை விட கூடுதலாக 20 சதவீத இயந்திரங்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணியின் தரத்தை உறுதி செய்ய அலுவா்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேளாண்மையின் பிற தேவைகளான விதை, தொழில்நுட்பம் மற்றும் வேளாண் இயந்திரங்களின் பயன்பாடுகளையும் உறுதி செய்ய அரசுத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் சந்தீப் சக்சேனா.

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, பொதுப் பணித் துறை தலைமை பொறியாளா் எஸ். அன்பரசன், செயற்பொறியாளா் முருகவேல் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.