தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பணியிலிருந்த மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு

கீழ்வேளூரில் பணியிலிருந்த மின்வாரிய ஊழியா் மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

கீழ்வேளூரில் பணியிலிருந்த மின்வாரிய ஊழியா் மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கீழ்வேளூா் வட்டம், ஆத்தூா் ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்தவா் த. தங்கராசு (57). தமிழ்நாடு மின்சார வாரியம், கீழ்வேளூா் துணைமின் நிலையத்தில் கம்பியாளராக பணிபுரிந்துவந்த இவா், திங்கள்கிழமை அதிகாலை பணியிலிருந்தபோது, ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். எனினும், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். தங்கராசுக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.