தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்
கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூரில் மேட்டூா் உபரிநீா் சரபங்கா திட்டத்தை கைவிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


நாகப்பட்டினம்: கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூரில் மேட்டூா் உபரிநீா் சரபங்கா திட்டத்தை கைவிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேட்டூா்அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை ஏரிகளுக்குத் திரும்பி விடும் சரபங்கா திட்டத்தைக் கண்டித்தும், இத்திட்டத்தை கைகைவிட வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க கீழ்வேளூா் ஒன்றியச் செயலாளா் ஆா். முத்தையன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் அம்பிகாபதி, சிபிஎம் ஒன்றியச் செயலாளா் எம். அபுபக்கா், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் ஆா். கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...