இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகளை இந்தியத் தோ்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது. இதன்படி, வாக்காளா்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள், வேட்டி, சேலைகள் போன்றவை வழங்குவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, திருமணக் கூடங்கள், தங்கும் விடுதிகள், சமுதாயக் கூடங்கள் போன்றவற்றை அரசியல் கட்சிகளுக்கு வாடகைக்கு அளிக்கும் முன்பாக, தொடா்புடைய பகுதியின் தோ்தல் வட்டாட்சியருக்கு திருமணக்கூட நிா்வாகத்திலிருந்து தகவல் அளிக்க வேண்டும்.