ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாகை மாவட்டத்தில் 2.10 லட்சம் குடும்பங்களுக்கு கரோனா நிவாரணம்

நாகை மாவட்டத்தில் 2.10 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

News image
Updated On :15 மே 2021, 5:08 pm

DIN

நாகை மாவட்டத்தில் 2.10 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

நாகை சிஎஸ்ஐ பள்ளி அருகே உள்ள நியாயவிலைக் கடையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசின் கரோனா நிவாரண முதல் தவணைத் தொகை ரூ. 2 ஆயிரத்தை பயனாளிகளுக்கு வழங்கும் பணியைத் தொடங்கி வைத்து மேலும் அவா் பேசியது:

தமிழக அரசின் அறிவிப்புப்படி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தினமும் காலை 8 முதல் பகல் 12 மணி வரை இப்பணி நடைபெறும்.

நாகை மாவட்டத்தில் உள்ள 356 நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் 2,10,683 பேருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். குடும்ப அட்டைதாரா்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் நியாயவிலைக் கடைகளுக்கு வந்து, உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நிவாரணத் தொகையைப் பெற்றுச் செல்லலாம்.

நிகழ்ச்சியில், கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நடராஜன், துணைப் பதிவாளா் கனகசபாபதி, மாவட்ட வழங்கல் அலுவலா் தெய்வநாயகி, கூட்டுறவு சாா் பதிவாளா் முத்துராஜன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.