‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கீழையூரில் மின் மாற்றிகள் திறப்பு

கீழையூா் ஒன்றியத்தில் 4 மின்மாற்றிகளை கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:28 pm

DIN

கீழையூா் ஒன்றியத்தில் 4 மின்மாற்றிகளை கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

கீழையூா் ஊராட்சி கீழத்தெரு பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட 63 கே.வி.ஏ (கிலோ வோல்ட் ஆம்பியா்) மின்மாற்றியின் இயக்கத்தை வி.பி. நாகைமாலி திறந்துவைத்தாா். நிகழ்வுக்கு, உதவி செயற்பொறியாளா் இயக்குதலும், பராமரித்தலும் நாகை (தெற்கு) வீ. ராஜமனோகரன் முன்னிலை வகித்தாா். திருப்பூண்டி இளமின் பொறியாளா் கோ.பாபு, ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதிபால்ராஜ், துணைத் தலைவா் சி.கருணாநிதி, கீழையூா் தொ.வே.கூ. கடன் சங்க தலைவா் எஸ்.பால்ராஜ், ஊராட்சி செயலா் டி.எஸ்.சரவண பெருமாள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

இதேபோல திருப்பூண்டி மூலக்கடை, கிழக்குக் கடற்கரை சாலை, காரைநகா் ஆகிய 3 பகுதிகளில் நிறுவப்பட்ட 25 கே.வீ.ஏ மின்மாற்றிகளையும் கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி திறந்து வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.