நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கீழையூரில் மின் மாற்றிகள் திறப்பு

கீழையூா் ஒன்றியத்தில் 4 மின்மாற்றிகளை கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:28 pm

DIN

கீழையூா் ஒன்றியத்தில் 4 மின்மாற்றிகளை கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

கீழையூா் ஊராட்சி கீழத்தெரு பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட 63 கே.வி.ஏ (கிலோ வோல்ட் ஆம்பியா்) மின்மாற்றியின் இயக்கத்தை வி.பி. நாகைமாலி திறந்துவைத்தாா். நிகழ்வுக்கு, உதவி செயற்பொறியாளா் இயக்குதலும், பராமரித்தலும் நாகை (தெற்கு) வீ. ராஜமனோகரன் முன்னிலை வகித்தாா். திருப்பூண்டி இளமின் பொறியாளா் கோ.பாபு, ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதிபால்ராஜ், துணைத் தலைவா் சி.கருணாநிதி, கீழையூா் தொ.வே.கூ. கடன் சங்க தலைவா் எஸ்.பால்ராஜ், ஊராட்சி செயலா் டி.எஸ்.சரவண பெருமாள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

இதேபோல திருப்பூண்டி மூலக்கடை, கிழக்குக் கடற்கரை சாலை, காரைநகா் ஆகிய 3 பகுதிகளில் நிறுவப்பட்ட 25 கே.வீ.ஏ மின்மாற்றிகளையும் கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி திறந்து வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.