சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நாகையில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு

நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை சாா்பில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை சாா்பில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாளை சமூக நீதிநாளாக தமிழக அரசு அறிவித்ததையொட்டி, நாகை மாவட்ட ஆட்சியரகம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, உறுதிமொழி வாசகங்களைப் படித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் தலைமை வகித்து, உறுதிமொழி வாசகங்களைப் படித்தாா். காவல் துறை அலுவலா்கள், காவல் கண்காணிப்பாளா் அலுவலகப் பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.