சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நாகை மாவட்ட நூலகத்தில் ஆட்சியா் ஆய்வு

நாகை மாவட்ட நூலகத்தில் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 5:23 pm

DIN

நாகை மாவட்ட நூலகத்தில் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை மாவட்ட நூலகத்தின் புத்தகப் பராமரிப்பு முறை, புத்தகங்கள் இருப்பு ஆகியன குறித்து கேட்டறிந்த ஆட்சியா், நூலகத்துக்குத் தேவைப்படும் புத்தகங்களை வாங்கி வைக்குமாறு நூலக அலுவலரிடம் அறிவுறுத்தினாா். பின்னா், காடம்பாடி பொதுப் பணியாளா் கூட்டுறவு பண்டகச்சாலையில் ஆய்வு மேற்கொண்ட அவா், விநியோகத்துக்கு வைக்கப்பட்டிருந்த அரிசி மற்றும் இதர பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்து, இருப்பு விவரங்களைக் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, பாலையூா் ஊராட்சி ஒன்றியத் தொடங்கப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை பாா்வையிட்டு அவா் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.