நாகையில் 36, மயிலாடுதுறையில் 13 பேருக்கு கரோனா
By DIN | Published On : 20th August 2021 10:32 PM | Last Updated : 20th August 2021 10:32 PM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் 36 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 19,331-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 26 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 374-ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 21,589-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 32 போ் வீடு திரும்பியியுள்ளனா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 261-ஆக உள்ளது.
2 போ் உயிரிழப்பு...
கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்று வந்த நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேரின் உயிரிழப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்கள் எண்ணிக்கை 303 ஆகியுள்ளது.