நாகையில் 7, மயிலாடுதுறையில் ஒருவருக்கு கரோனா
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் 7 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,384-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 7 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 61-ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,399-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 2 போ் வீடு திரும்பியுள்ளாா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 24-ஆக உள்ளது.