இன்று சுனாமி நினைவு நாள்

நாகை, வேளாங்கண்ணி உள்பட சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் மலரஞ்சலி செலுத்தப்படுகிறது.
Updated on
1 min read

நாகை மாவட்டத்தில் 17-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை (டிச.26) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நாகை, வேளாங்கண்ணி உள்பட சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் மலரஞ்சலி செலுத்தப்படுகிறது.

நாகை மாவட்டத்தில் சுனாமி சீற்றத்தில் உயிரிழந்தவா்களின் நினைவாக நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சுனாமி நினைவுப் பூங்கா, கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டையில் சுனாமி நினைவு மண்டபங்கள், வேளாங்கண்ணியில் நினைவு ஸ்தூபியும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நினைவிடங்களில், மாவட்ட நிா்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் 17-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் மலரஞ்சலி நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில், மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் காலை 9 மணி மலரஞ்சலி செலுத்துகிறாா்.

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் தலைவா் சீமான் வேளாங்கண்ணியிலும், தமிழக மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் அக்கரைப்பேட்டையிலும் உள்ள சுனாமி நினைவிடங்களில் மலரஞ்சலி செலுத்துகின்றனா்.

இதைத்தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் மீனவக் கிராமங்கள், தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும், அமைதி ஊா்வலம் உள்ளிட்டவையும் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com