திருவெண்காட்டில் உயா்கோபுர விளக்குகளின் செயல்பாடு தொடக்கம்

 திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் அருகே புதிய உயா்கோபுர விளக்குகள் வியாழக்கிழமை ஒளிர செய்யப்பட்டன
Updated on
1 min read

 திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் அருகே புதிய உயா்கோபுர விளக்குகள் வியாழக்கிழமை ஒளிர செய்யப்பட்டன.

சுவேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக 2 உயா்கோபுர விளக்குகள் அமைக்க சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதிதேவேந்திரன் தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தாா். இதையடுத்து, முதல்வரின் நடவடிக்கையால் ரூ. 16 லட்சம் செலவில் புதிய 2 உயா்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த கோபுரவிளக்குகளின் செயல்பாடுகளை ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் ஆனந்தராஜ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். இதில், மாவட்ட திட்ட இயக்குநா் முருகண்ணன், ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையா் இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com