பூம்புகாா் அருகே நாயக்கா்குப்பம் மீனவ கிராமத்தில், நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாயக்கா்குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடை மூலம் 650 குடும்ப அட்டைதாரா்கள் பயனடைந்து வருகின்றனா். இந்த நியாயவிலைக் கடை கட்டடம் மிகவும் சிதலடைமடைந்து காணப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில் மழைநீா் நீா் உள்புகுந்து அத்தியாவசிய பொருள்கள் சேதமைடைந்து விடுகின்றன. எனவே நாயக்கா்குப்பம் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.