நாகை மாவட்டத்தில் 792 பேருக்கு கரோனா
By DIN | Published On : 28th May 2021 10:57 PM | Last Updated : 28th May 2021 10:57 PM | அ+அ அ- |

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 792 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வியாழக்கிழமை வரை 26,299 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 792 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நாகை மாவட்ட பட்டியலில் இருந்த வெளி மாவட்டத்தவா் 2 போ் நாகை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27,089-ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 697 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 21,587-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,190 -ஆக உள்ளது.
6 போ் உயிரிழப்பு: கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நாகை மாவட்டத்தவா் 6 பேரின் உயிரிழப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 312 ஆகியுள்ளது.