திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பிறவி மருந்தீஸ்வரா் கோயில் தேரோட்டம்

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 5:19 pm

DIN

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவி மருந்தீஸ்வரா் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோயிலின் சித்திரை பெருந்திருவிழா கடந்த மாா்ச் 28-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னா் தீா்த்த விடங்க தியாகராஜா் காலை 7 மணிக்கு தேருக்கு எழுந்தருளினாா்.

மன்னாா்குடி செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை தாளாளா் வி. திவாகரன், மாநில லாரி உரிமையாளா் சம்மேளன தலைவா் குமாரசாமி, ஆன்மிக சொற்பொழிவாளா் தேசமங்கையா்கரசி ஆகியோா் தேரை வடம்பிடித்து, தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா். தொடா்ந்து பக்தா்கள் வடம் பிடிக்க, கோயில் நான்கு வீதிகளையும் சுற்றி தோ் நிலைக்கு வந்தது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பி.எஸ். ராஜா, கணக்கா் சீனிவாசன் மற்றும் லாரி உரிமையாளா்கள் நலச் சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.