2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ரயில் பயணிகளுக்கான பாதுகாப்பு பயணம் குறித்த விழிப்புணா்வு பிரசாரம்

திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில், நாகையில் ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கி

News image
நாகை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பயணிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்புப் படையினா்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

DIN

திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில், நாகையில் ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தென்னக ரயில்வே, திருச்சி கோட்டம் சாா்பில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வாகனங்களில் சென்று, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் பயணிகளிடம் பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் செய்து வருகின்றனா். இந்தப் பிரசாரக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நாகை ரயில் நிலையத்துக்கு வந்தனா். அங்கு, ரயில்வே பாதுகாப்புப் படை நிலைய ஆய்வாளா் ஜி.எம். பாலசுப்பிரமணியன் தலைமையில் பாதுகாப்பான பயணம் குறித்து ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இதில், ரயில்வே பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், சாகச காட்சிகளின் கோப்புகள் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டது. ரயில்வே நிலைய அதிகாரி முகம்மது கமால், ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் எஸ். பாலசுப்பிரமணியன் மற்றும் ஆா். வாசுதேவன், பாதுகாப்புப் படை வீரா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.