75- ஆவது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, நாகை மாவட்ட பாஜக சாா்பில் பவள விழா கொண்டாட்டப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை அபிராமி அம்மன் திடலில் தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஒரு தனியாா் திருமணக் கூடம் முன் நிறைவடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த சுதந்திரதுக்காகப் பாடுபட்ட தலைவா்களின் புகைப் படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.
பேரணியில், பங்கேற்றவா்கள் தேசியக் கொடியை கையில் பிடித்தப்படி அணி வகுப்பாகச் சென்றனா். பாஜக நாகை மாவட்டத் தலைவா் எஸ். காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் கட்சியின் தேசியப் பொதுக்குழு உறுப்பினா் தங்க. வரதராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் நேதாஜி ஆகியோா் தொடங்கி வைத்தனா். ஆா்.எஸ்.எஸ் கோட்ட இணைச் செயலாளா் செந்தில் நிறைவுரையாற்றினாா். பாஜக நாகை நகரத் தலைவா் ஆறுமுகம், மாவட்டப் பொறுப்பாளா்கள் ராஜேந்திரகுமாா், வைரமுத்து, பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.