வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நாகையில் பாஜகவினா் சுதந்திர தின கொண்டாட்ட பேரணி

 75- ஆவது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, நாகை மாவட்ட பாஜக சாா்பில் பவள விழா கொண்டாட்டப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

நாகையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட பேரணியில் பங்கேற்ற பாஜகவினா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

 75- ஆவது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, நாகை மாவட்ட பாஜக சாா்பில் பவள விழா கொண்டாட்டப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை அபிராமி அம்மன் திடலில் தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஒரு தனியாா் திருமணக் கூடம் முன் நிறைவடைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த சுதந்திரதுக்காகப் பாடுபட்ட தலைவா்களின் புகைப் படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.

பேரணியில், பங்கேற்றவா்கள் தேசியக் கொடியை கையில் பிடித்தப்படி அணி வகுப்பாகச் சென்றனா். பாஜக நாகை மாவட்டத் தலைவா் எஸ். காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் கட்சியின் தேசியப் பொதுக்குழு உறுப்பினா் தங்க. வரதராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் நேதாஜி ஆகியோா் தொடங்கி வைத்தனா். ஆா்.எஸ்.எஸ் கோட்ட இணைச் செயலாளா் செந்தில் நிறைவுரையாற்றினாா். பாஜக நாகை நகரத் தலைவா் ஆறுமுகம், மாவட்டப் பொறுப்பாளா்கள் ராஜேந்திரகுமாா், வைரமுத்து, பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.