இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வேதாரண்யம்: சுமையுந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து ஓட்டுநர் பலி

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கட்டுப்பாட்டை இழந்த  சுமையுந்து (லோடு ஆட்டோ) இன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து நேர்ந்த விபத்தில் அதன் ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே பலியானர்.

News image
ஆற்றுக்குள் கவிழ்ந்த சுமையுந்து.
Updated On :7 ஜூலை 2022, 9:52 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கட்டுப்பாட்டை இழந்த  சுமையுந்து (லோடு ஆட்டோ) இன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து நேர்ந்த விபத்தில் அதன் ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே பலியானர்.

மருதூர் தெற்கு, ஆண்டியப்பன்காடு (தகட்டூர் கடை வீதி அருகே) பகுதியைச் சேர்ந்தவர் முத்துலிங்கம் மகன் செந்தில்குமார் (40). வேன் ஓட்டுநரான இவர், சொந்தமாக சுமையுந்து வைத்து ஓட்டிவந்தார்.

இன்று முற்பகலில் தகட்டூரில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, தென்னடார்  கிராமத்துக்கு சென்றுக் கொண்டிருந்தார். பஞ்சாதிக்குளம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த சுமையுந்து கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் செல்லும் முள்ளியாற்றுக்குள் கவிழ்ந்தது. 

தகவல் அறிந்த பொது மக்கள் தீயணைப்புத் துறை வீரர்கள் செந்தில்குமாரை சடலமாக மீட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.