வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கட்டுப்பாட்டை இழந்த சுமையுந்து (லோடு ஆட்டோ) இன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து நேர்ந்த விபத்தில் அதன் ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே பலியானர்.
மருதூர் தெற்கு, ஆண்டியப்பன்காடு (தகட்டூர் கடை வீதி அருகே) பகுதியைச் சேர்ந்தவர் முத்துலிங்கம் மகன் செந்தில்குமார் (40). வேன் ஓட்டுநரான இவர், சொந்தமாக சுமையுந்து வைத்து ஓட்டிவந்தார்.
இன்று முற்பகலில் தகட்டூரில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, தென்னடார் கிராமத்துக்கு சென்றுக் கொண்டிருந்தார். பஞ்சாதிக்குளம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த சுமையுந்து கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் செல்லும் முள்ளியாற்றுக்குள் கவிழ்ந்தது.
தகவல் அறிந்த பொது மக்கள் தீயணைப்புத் துறை வீரர்கள் செந்தில்குமாரை சடலமாக மீட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிவகார்த்திகேயன் படத்தில் திலீப்?

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


