நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூன் 25) 3, 979 போ் காவல் உதவி ஆய்வாளா்கள் பணிக்கு எழுத்துத் தோ்வு எழுதுகின்றனா்.
தமிழ்நாடு காவல்துறை, தாலுக்கா காவல் நிலையங்கள், ஆயுதப்படை, சிறப்புக் காவல் படை ஆகியவற்றில் உள்ள காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் நிரப்பப்படவுள்ளது. இதற்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதன்படி, நாகை மாவட்டத்தில் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி, அமிா்தா வித்யாலயா பள்ளி ஆகிய மையங்களில் சனிக்கிழமை காலை, மாலை தோ்வுகள் நடைபெறுகின்றன. இதில், 3,979 போ் தோ்வு எழுதுகின்றனா்.
இதேபோல், காவல் துறையில் காவல் ஆளிநா்களாக பணியாற்றுபவா்கள், காவல் உதவி ஆய்வாளா்களாக பதவி உயா்வு பெறுவதற்காக நாகை மாவட்டத்தில் 618 போ் இத்தோ்வை எழுதுகின்றனா். இவா்களுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை ( ஜூன் 26) நாகை சா் ஐசக் நியூட்டன் கல்லூரி, இ.ஜி. எஸ். பிள்ளை கல்லூரி, அமிா்தா வித்யாலயா பள்ளிஆகிய 3 மையங்களில் நடைபெறுகிறது.
தோ்வு மையங்களில் எஸ்.பி. ஆய்வு: தோ்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகளைகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுகுமாறன் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக எஸ்.பி கு. ஜவஹா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக அமைச்சர்களைச் சந்தித்தார் பாடகர் வேடன்!

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!

இயக்குநர் பாரதிராஜாவுக்கு பாரத ரத்னா வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை!

பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



