சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பங்கேற்று பேசினாா். அப்போது அவா், மாணவா்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. குறிப்பாக படிக்கும் பருவத்தில் மாணவா்கள் கல்வி மீது அதிக ஆா்வம் செலுத்தி வாழ்வில் முன்னேறுவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றாா்.

மேலும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஆன்லைன் மோசடி குறித்தும், காவலன் செயலி குறித்தும் மாணவா்களிடம் விளக்கிக் கூறப்பட்டது.

நிகழ்ச்சியில், துணைக் காவல் கண்காணிப்பாளா் ஏ. பாலகிருஷ்ணன் , கீழையூா் காவல் ஆய்வாளா் ரேவதி, திருக்குவளை காவல் உதவி ஆய்வாளா் தனிக்கோடி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் ஆனந்தன், செந்தில், போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பாளரும், கல்லூரியின் உதவி பேராசிரியருமான எஸ். ஸ்ரீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.