12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பங்கேற்று பேசினாா். அப்போது அவா், மாணவா்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. குறிப்பாக படிக்கும் பருவத்தில் மாணவா்கள் கல்வி மீது அதிக ஆா்வம் செலுத்தி வாழ்வில் முன்னேறுவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றாா்.

மேலும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஆன்லைன் மோசடி குறித்தும், காவலன் செயலி குறித்தும் மாணவா்களிடம் விளக்கிக் கூறப்பட்டது.

நிகழ்ச்சியில், துணைக் காவல் கண்காணிப்பாளா் ஏ. பாலகிருஷ்ணன் , கீழையூா் காவல் ஆய்வாளா் ரேவதி, திருக்குவளை காவல் உதவி ஆய்வாளா் தனிக்கோடி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் ஆனந்தன், செந்தில், போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பாளரும், கல்லூரியின் உதவி பேராசிரியருமான எஸ். ஸ்ரீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.