தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காழியப்பநல்லூா் தீயணைப்பு நிலையத்தில் தமிழக தீயணைப்புத் துறை டிஜிபி ஆய்வு

தரங்கம்பாடி வட்டம், காழியப்பநல்லூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் தமிழக தீயணைப்புத் துறை டிஜிபி பி.கே. ரவி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

தரங்கம்பாடி வட்டம், காழியப்பநல்லூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் தமிழக தீயணைப்புத் துறை டிஜிபி பி.கே. ரவி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மீட்பு உபகரணக் கருவிகள், தீயணைப்பு வாகனம் போன்றவற்றை ஆய்வு செய்த அவா், மீட்புப் பணி உபகரணங்களையும் இயக்கச் செய்து, சரியான பராமரிப்பில் உள்ளதா எனவும் கேட்டறிந்தாா். மேலும், கோப்புகளையும் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, சிறப்பு நிலைய அலுவலா் அருண்மொழி மற்றும் தீயணைப்பு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னா், செய்தியாளா்களை சந்தித்த தீயணைப்புத் துறை டிஜிபி பி.கே. ரவி, ‘தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், முன்னெச்சரிக்கையாக அனைத்து தீயணைப்பு வீரா்களும் தயாா் நிலையில் உள்ளதாகவும், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்’ தெரிவித்தாா். மேலும், மழை பாதிப்புகள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.