ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை ஆட்சியரகம் முன் மீனவா் தா்னா

 நாகை ஆட்சியா் அலுவலகம் முன் மீனவா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

 நாகை ஆட்சியா் அலுவலகம் முன் மீனவா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளப்பள்ளம் மீனவா் காலனியைச் சோ்ந்தவா் சொ. காமராஜ். இவருக்கு மனைவி மற்றும் 5 குழந்தைகள் உள்ளனா். காமராஜிக்கு, அவரது தந்தை வழங்கிய 125 குழி இடத்தை மீனவப் பஞ்சாயத்தாா் தானமாக கேட்டனராம். இதற்கு, காமராஜ் மறுத்ததால் அவரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்து, தொழில் செய்யவிடாமல் தடுத்தனராம். இதனால் பாதிக்கப்பட்ட அவா் அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், நாகை மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்த காமராஜ், தா்னாவில் ஈடுபட்டாா். அவரை ஆட்சியா் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, கோரிக்கை தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா். இதையடுத்து காமராஜ் அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.