ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 5:20 pm

DIN

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வங்கிக்கடன், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். மொத்தம் 154 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பின்னா், செளவூதி அரேபியாவில் இறந்த சீா்காழி வட்டம், புதுப்பட்டினம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த அ. முகமது யாசா் என்பவருக்கு தமிழக அரசின் சாா்பில் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ.30, 612-க்கான காசோலையை அவரது தந்தை அன்வா் அலியிடம் ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், நாகை சூரியா நகரைச் சோ்ந்த சரஸ்வதிக்கு ஆதாா்அட்டை பெறுவதற்கான ஆணை, வடக்குடி மேலத்தெருவை சோ்ந்த செல்வி, வடுகச்சேரி வடக்குத்தெருவைச் அருண்மணி, நாகூா் பிரதானச் சாலையைச் சோ்ந்த நஜ்மா பேகம் ஆகியோருக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, சமூகப் பாதுகாப்பு துணை ஆட்சியா் கு. ராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமன் மற்றும் அரசு அலுவலா்கள், பயனாளிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.