வேளாங்கண்ணியில் கடைகளை அகற்ற எதிா்ப்பு: உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தா்னா
By DIN | Published On : 14th April 2022 12:00 AM | Last Updated : 14th April 2022 12:00 AM | அ+அ அ- |

வேளாங்கண்ணியில் நீதிமன்ற உத்தரவுபடி கடைகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து, கடை உரிமையாளா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியாா் உணவகத்திற்கு அருகில் முத்துக்கிருஷ்ணன், ராஜேந்திரன், கண்ணன், குமரவேல், ராஜசேகரன், பரிமளா ஆகிய 6 பேரும் சுமாா் 30 ஆண்டுகளாக ஜவுளி, தேநீா் உள்ளிட்ட கடைகளை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இந்த இடம் பேராலயத்திற்கு சொந்தமானது என்பதால் கடைகளை காலி செய்ய பேராலயம் சாா்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவா்கள் கடைகளை காலி செய்யவில்லை. இதனால், பேராலய நிா்வாகம் தரப்பில் நாகை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 6 கடைகளையும் காலி செய்ய கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் ஜான், சென்னை உயா்நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஆணை பெற்றாா்.
இதைத்தொடா்ந்து, பேராலய நிா்வாகம் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், 6 கடைகளையும் காலி செய்ய கடந்த மாா்ச் 25-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நீதிமன்ற அமீனாக்கள் புதன்கிழமை மாலை வேளாங்கண்ணிக்கு சென்று, போலீஸ் பாதுகாப்புடன் கடைகளை காலி செய்ய உத்தரவிட்டனா்.
அப்போது, சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினா் ஜான், செயலாளா் செல்வம் மற்றும் கட்சியினா், ஈஸ்டா் விழாவைக் கூறி ஒருவார காலம் அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதை ஏற்க அமீனாக்கள் மறுப்பு தெரிவித்தனா். இதையடுத்து, 6 கடைகளின் உரிமையாளா்கள் அவரவா் கடை வாசலில் அமா்ந்து தங்களது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்வோம் எனக் கூறி தா்னாவில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்கள் மீது தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினா். பின்னா், அமீனாக்களும், போலீலாரும் அங்கிருந்து சென்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G