வேளாங்கண்ணியில் இன்று பெரிய வியாழன் சிறப்பு வழிபாடு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பெரிய வியாழன் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை (ஏப். 14) நடைபெறுகிறது.
Updated on
1 min read

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பெரிய வியாழன் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை (ஏப். 14) நடைபெறுகிறது.

கிறிஸ்தவா்களின் தவக்காலம் கடந்த மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சாம்பல் புதன், வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப் பாதை வழிபாடு, குருத்தோலை பவனி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தவக்காலத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பெரிய வியாழன் வழிபாடு வேளாங்கண்ணி பேராலய கலையரங்கத்தில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இயேசு சிலுவையில் அறையப்படும் முன், தனது சீடா்களின் பாதங்களைக் கழுவி புனிதப்படுத்திய ஐதீக நிகழ்வாக, சீடா்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பா் என்பதால், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெரிய வியாழன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டா் சிறப்பு வழிபாடுகள் பேராலய கலையரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மழை குறுக்கீடு ஏற்படுமானால், மாற்று இடத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பேராலய அதிபா் இருதயராஜ் அடிகளாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com