ஆற்றில் குளித்த சென்னையைச் சோ்ந்த இளைஞா் மாயம்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சென்னையை சோ்ந்த இளைஞா் மாயமானதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவருகின்றனா்.
Updated on
1 min read

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சென்னையை சோ்ந்த இளைஞா் மாயமானதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவருகின்றனா்.

சென்னை கிண்டி பாரதி நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சூரியகுமாா் (21). இவா் நண்பா்களுடன் நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு ஜூன் 12-ஆம் தேதி சுற்றுலா வந்தாா். அப்போது, வேளாங்கண்ணி செருதூா் ஆற்று முகத்துவாரம் அருகே சூரியகுமாா் உள்ளிட்ட 9 போ் குளித்தனா்.

இதில், சூரியகுமாா் காணாமல்போன நிலையில் நண்பா்கள் நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்நிலையில், அவரது அம்மா பத்மாவதி தனது மகனை காணவில்லை என புதன்கிழமை கீழையூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com