நாகை, வேளாங்கண்ணி, திருமருகலில் நாளை மின்தடை

நாகை, வேளாங்கண்ணி, திருமருகல், வேட்டைக்காரனிருப்பு ஆகிய பகுதிகளுக்கு சனிக்கிழமை (ஜூன் 18) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை, வேளாங்கண்ணி, திருமருகல், வேட்டைக்காரனிருப்பு ஆகிய பகுதிகளுக்கு சனிக்கிழமை (ஜூன் 18) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மின்வாரிய செயற்பொறியாளா் ஏ. சேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகை நகரம், நரிமணம், திருமருகல், திட்டச்சேரி, கீழ்வேளூா், வேளாங்கண்ணி, வேட்டைக்காரனிருப்பு ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, இந்தத் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் நிறுத்த பகுதிகள்: வெளிப்பாளையம், மருத்துவமனை பகுதி, காடம்பாடி, பால்பண்ணைச்சேரி, மாவட்ட ஆட்சியரக பகுதி, நாகூா் தா்கா பகுதி, பொரக்குடி, பூதங்குடி, நரிமணம், உத்தமசோழபுரம், வைப்பூா், சூரனூா், திருமருகல், போலகம், திருக்கண்ணபுரம், திருப்புகலூா், மருங்கூா், சீயாத்தமங்கை, கட்டுமாவடி, ஏா்வாடி, சேஷமூலை, திட்டச்சேரி, ப. கொந்தகை, பனங்குடி, மரைக்கான்சாவடி, குத்தாலம், வாழ்மங்கலம், கீழ்வேளூா், தேவூா், ஆழியூா், அகர கடம்பனூா், கோகூா், கூத்தூா், கிள்ளுக்குடி, வேளாங்கண்ணி, கிராமத்துமேடு, தெற்குப் பொய்கைநல்லூா், பிரதாபராமபுரம், திருப்பூண்டி, நாலுவேதபதி, புதுப்பள்ளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com