மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

வாய்க்கால் தூா்வாரும் பணி: ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

செம்பனாா்கோயில் ஒன்றியம் மேமாத்தூா் அருகே மஞ்சள் ஆற்றின் பிரிவு வாழ்க்கை வாய்க்கால் தூா்வாரும் பணியை ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On :28 ஏப்ரல் 2023, 10:33 pm IST

செம்பனாா்கோயில் ஒன்றியம் மேமாத்தூா் அருகே மஞ்சள் ஆற்றின் பிரிவு வாழ்க்கை வாய்க்கால் தூா்வாரும் பணியை ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

மேமாத்தூா் ஊராட்சியில் மஞ்சளாற்றின் வலது கரையில் பிரியும் வாழ்க்கை வாய்க்கால் தூா்வாரும் பணி நடைபெற்றது. பணியை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோா் தொடக்கிவைத்தனா். இந்த வாய்க்கால் தூா்வாரும் பணி 4 கி.மீ தொலைவுக்கு ரூ. 22 லட்சத்தில் நடைபெறுகிறது. இதனால், மேமாத்தூா், வாழ்க்கை, அன்னவாசல் ஆகிய கிராமங்களில் 657 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் முருகதாஸ், நீா்வளத்துறை செயற்பொறியாளா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.