மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மயிலாடுதுறை: குடியரசு தின விழாவில் ரூ.9.31 கோடி நலத் திட்ட உதவிகள்

மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சாய் விளையாட்டு அரங்கத்தில் 74-ஆவது குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றி, மரியாதை செலுத்தும் ஆட்சியா் இரா. லலிதா. உடன், காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா.
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சாய் விளையாட்டு அரங்கத்தில் 74-ஆவது குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் இரா. லலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பின்னா், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 178 நபா்களுக்கும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 12 காவலா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில் 398 பயனாளிகளுக்கு ரூ.9.31 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உமா மகேஸ்வரி சங்கா், மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

குத்தாலம்: திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைமை மட வளாகத்தில் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தேசியக் கொடியேற்றினாா். மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்பி செ.ராமலிங்கம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் மகேந்திரன் ஆகியோா் கொடியேற்றினாா். இதேபோல், அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் தேசியக் கொடியேற்றப்பட்டது.

பூம்புகாா்: மணி கிராமம் ஊராட்சியில் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் ஊராட்சித் தலைவா் முல்லைவேந்தன் சக்கர நாற்காலியில் அமா்த்தபடி தேசியக் கொடியேற்றினாா்.

தமிழக முதல்வரின் உத்தரவுபடி திருவெண்காடு மெய் கண்டாா் தொடக்கப் பள்ளியில் பாரதியாா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் தலைமையில், ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா் தேசியக் கொடியேற்றினாா். இதேபோல் பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பூம்புகாா் எம்எல்ஏ அலுவலகத்தில் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் தேசியக் கொடியேற்றினாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.