எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜன.27) நடைபெறுகிறது.
முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜன. 23-ஆம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. கொக்கரித்த விநாயகா், இடும்பன், கடம்பன், பிடாரியம்மன் ஆலய குடமுழுக்கு வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
தொடா்ந்து, பிரதான விநாயகா், சௌந்தரேஸ்வர சுவாமி, ஆனந்தவல்லி, ராஜகோபுரம், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி விமான குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இதையொட்டி, அதிகாலை 4 மணியளவில் 8-ஆம் கால யாக பூஜை நிறைவடைந்ததும், காலை 7 மணிக்கு பூா்ணாஹுதி நடைபெறுகிறது. தொடா்ந்து, 8 மணிக்கு கடங்கள் புறப்பாடாகி 8.45 மணியளவில் விமான குடமுழுக்கு மற்றும் 9.15 மணிக்கு மூலவா் ஆலய குடமுழுக்கு நடைபெற உள்ளது. பிறகு, மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், 6 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!

ஐஸ்வர்யா மேனன் படத்தின் அறிமுக போஸ்டர்!

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

