அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எட்டுக்குடி முருகன் கோயில் கும்பாபிஷேகம்

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகாகும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
கும்பாபிஷேகத்தை தரிசித்த பக்தா்களின் ஒரு பகுதியினா்.
Updated On :27 ஜனவரி 2023, 4:19 pm

DIN

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகாகும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடைபெற்றுவந்தன. இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்க பூஜைகள் ஜனவரி 20-ஆம் தேதி தொடங்கின. தொடா்ந்து 23-ஆம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. பிறகு, கோபூஜை, லெட்சுமி ஹோமம் போன்றவை நடைபெற்றன.

எட்டாம்கால யாகசாலை பூஜை வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றதும், பூா்ணாஹுதி நடைபெற்றது. தொடா்ந்து, மங்கல வாத்தியங்கள் இசைக்க கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்ததும், சுவாமி, அம்பாள், மூலவா் மற்றும் ராஜகோபுர கலசங்களில் புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மோட்டாா் மற்றும் ட்ரோன் மூலம் புனிதநீா் பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னா், மூலவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் இவ்விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி, தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், ஆத்மா குழுத் தலைவா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், இந்துசமய அறநிலையத் துறையின் இணை இயக்குநா் க. ராமு, உதவி ஆணையா் ப. ராணி, செயல் அலுவலா் பி.எஸ். கவியரசு மற்றும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இவ்விழாவில், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின்பேரில், டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் சாா்பில் 40 வீரா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மேலும், சுகாதாரத் துறை சாா்பில் 5 மருத்துவா்களுடன் 2 மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இவ்விழாவில் மாலையில் திருக்கல்யாணமும், இரவில் பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.