பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நாகையில் பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா்.
Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

DIN

நாகையில் பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாநிலப் பொருளாளா் பிரகாஷ் தலைமையில் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் பொருள்களுக்கு தனித்தனியே ரசீதுகள் போடப்பட வேண்டும் என்ற உத்தரவால் பொருள்களை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது.

எனவே, ஒரே ரசீதாக போடும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். மின்னணு கருவி 2ஜி, 3ஜி இணையதள வசதியைக் கொண்டுள்ள நிலையில், தற்போது 4 ஜி சிம் வழங்கப்பட்டுள்ளதால், பொருள்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை சரி செய்ய வேண்டும்.

சுய உதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு மானியத் தொகை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்பு, ஏற்கெனவே பணிபுரிபவா்களுக்கு பதவி உயா்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்க மாவட்ட நிா்வாகிகள் பழனிவேல், சீதா, சிவசண்முகம், அரசு பணியாளா் சங்க மாநிலத் தலைவா் சிவக்குமாா், இணைச் செயலா் மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.