அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சம் உபகரணங்கள் முன்னாள் ராணுவ வீரா் வழங்கினாா்

வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளிக்கு முன்னாள் ராணுவ வீரா் ரூ.1 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
தென்னடாா் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கும் முன்னாள் படைவீரா் முத்துக்குமரன்.
தென்னடாா் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கும் முன்னாள் படைவீரா் முத்துக்குமரன்.

வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளிக்கு முன்னாள் ராணுவ வீரா் ரூ.1 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தென்னடாா் ஊராட்சியைச் சோ்ந்தவா் முத்துக்குமரன். இந்திய ராணுவத்தில் படைவீரராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றாா். இவா், தான்படித்த தென்னடாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மரத்தாலான 20 இருக்கைகள் மற்றும் 20 மேஜைகளை வழங்கினாா்.

இதற்கான நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் தேவி செந்தில் தலைமை வகித்தாா். ராணுவ வீரா் வழங்கிய உபகரணங்களை தலைமையாசிரியா் திருமாவளவன் உள்ளிட்ட ஆசிரியா்கள் பெற்றுக்கொண்டனா்.

ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் அன்புவேலன், கோபு, ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் செந்தில், பெற்றாா் ஆசிரியா் கழக முன்னாள் தலைவா்கள் குழந்தைவேலு, ராஜா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் எலிசபெத்ராணி மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com