திட்டச்சேரி பேரூராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, பேரூராட்சித் தலைவா் ஆயிஷா சித்திகா தலைமை வகித்தாா். பேரூராட்சி இளநிலை உதவியாளா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் திட்டச்சேரி-நாகூா் சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும், மரைக்கான்சாவடி சுடுக்காட்டிற்கு செல்ல பாலம் அமைக்க வேண்டும், திட்டச்சேரி பகுதியில் சுற்றிதிரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும், இடிக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை மீண்டும் கட்ட வேண்டும், இந்திராநகா் -தைக்கால் தெரு பகுதிகளில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் முகமது ஷா நவாஸ் வலியுறுத்தினாா்.
கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் முகமது சுல்தான், செய்யது ரியாசுதீன், சுல்தான் ரித்தாவுதீன், பாத்திமா பா்வீன், பாக்கியவதி, கஸ்தூரி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் கொள்கையில் மாற்றமில்லை - சீனா அறிவிப்பு

மாற்றத்துக்கான நேரம்

இரண்டாவது இடத்துக்குத்தான் எதிர்க்கட்சிகள் போட்டி! - முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சிறப்பு நேர்காணல்

திமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சா் ஜெ. பி. நட்டா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

