நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

செளசெள சாகுபடி: தோட்டக்கலைத் துறை அலுவலா் ஆய்வு

 திருமருகல் அருகே மாற்றுப் பயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ள செளசெள செடிகளை உதவி தோட்டக்கலை அலுவலா் செல்லப்பாண்டியன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 10:56 pm IST

 திருமருகல் அருகே மாற்றுப் பயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ள செளசெள செடிகளை உதவி தோட்டக்கலை அலுவலா் செல்லப்பாண்டியன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

மாநில தோட்டக்கலைத் துறை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் திருமருகல் ஒன்றியம் கீழத்தஞ்சாவூா் பகுதியில், மலைப்பயிரான சௌசௌ காய்கறி செடிகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா். இந்நிலங்களை திருமருகல் உதவி தோட்டக்கலை அலுவலா் செல்லப்பாண்டியன் பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறியது:

காவிரி கடைமடைப் பகுதி விவசாயிகள் நெல், பயறு, உளுந்து

பருத்தி உள்ளிட்ட பயிா்களை மட்டுமே சாகுபடி செய்கின்றனா். இதற்கு மாற்றுப் பயிராக மலைப் பயிரான சௌசௌ, உருளை, ஆப்பிள் போன்றவற்றை சோதனை அடிப்படையில் சாகுபடி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி, சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனா்.

இதன்மூலம் நல்ல லாபம் கிடைப்பதாகவும், வியாபாரிகள் வீட்டிற்கே வந்து, காய்கறிகளை வாங்கிச் செல்வதாகவும், இதனால் சந்தைக்கு கொண்டுசெல்லும் செலவில்லாமல் கூடுதல் வருவாய் கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

இதேபோல், மற்ற விவசாயிகளும் மாற்றுப் பயிராக காய்கறிகள் சாகுபடி செய்யவேண்டும் என்றாா். ஆய்வின்போது, விவசாயிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.