மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை நாள்களை 200 நாள்களாக உயா்த்த வேண்டும் என நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு வலியுறுத்தினாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் வீ. தம்புசாமி மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் எட்டுக்குடியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கட்சியின் துணை செயலாளா் வீ.எஸ். மாசேதுங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை மக்களவை தொகுதி உறுப்பினா் எம். செல்வராசு, கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினா் ஜி. பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.
கட்சியின் மூத்த தலைவா் மறைந்த வீ. தம்புசாமி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து கட்சிக்கொடியேற்றப்பட்டது.
பின்னா் பேசிய மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை நாள்களை 200-ஆக உயா்த்த வேண்டும். தினக்கூலியை 600- ஆக அதிகரிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலருமான டி. செல்வம், ஒன்றியச் செயலாளா் எஸ். காந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹார்ட்டின் பட டிரைலர்!

கட்டுமான தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்காக தொடங்கியுள்ள அரசு ஐடிஐயில் நேரடி சோ்க்கை

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு: வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா்






