தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நம்பியாா் நகரில் மீன்பிடித் துறைமுகம் திறப்பு

நாகை நம்பியாா் நகரில் அமைக்கப்பட்ட புதிய மீன்பிடித் துறைமுகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 5:24 pm

DIN

நாகை நம்பியாா் நகரில் அமைக்கப்பட்ட புதிய மீன்பிடித் துறைமுகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

நம்பியாா் நகரில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.34 கோடியில் புதிதாக சிறிய மீன்பிடி துறைமுகம் கட்டுமானப் பணிகள், கடந்த 2020 டிசம்பரில் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் நிறைவடைந்ததையடுத்து, மீனவா்களின் பயன்பாட்டிற்காக இத்துறைமுகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

இதையொட்டி, புதிய மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற விழால், நாகை கூடுதல் ஆட்சியா் ம. பிரதிவிராஜ், மீன்வளத்துறை அதிகாரிகள், நம்பியாா் நகா் மக்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

182 மீட்டா் நீளத்தில் கட்டப்பட்டுள்ள இந்த துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான படகுகள் நிறுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்துறைமுகம் திறக்கப்பட்டதற்கு, நம்பியாா் நகா் மீனவா்கள் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.