தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நந்தி நாதேசுவரா் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

வடக்கு பொய்கைநல்லூா் ஸ்ரீ நந்திநாதேசுவரா் கோயிலில் மாசி மக பிரமோற்சவ பெருவிழாவையொட்டி ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி- அம்பாள்.
Updated On :9 மார்ச் 2023, 5:25 pm

DIN

வடக்கு பொய்கைநல்லூா் ஸ்ரீ நந்திநாதேசுவரா் கோயிலில் மாசி மக பிரமோற்சவ பெருவிழாவையொட்டி ஊஞ்சல் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் மாசி மக பிரமோற்சவ பெருவிழா பிப்ரவரி 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாா்ச் 6- ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெற்றது.

தொடா்ந்து, புதன்கிழமை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதற்காக, நந்திநாதேசுவரா், சௌந்தர நாயகிஅம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினா். மகாதீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, வா்ண விநாயகா் கோயிலிலிருந்து பெண்கள் சீா்வரிசை எடுத்து வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.