திருவெண்காடு கோயிலில் வேத பாராயணம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் இந்திரத் திருவிழாவையொட்டி வேத பாராயணம் நடைபெறுகிறது.
Published on
Updated on
1 min read

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் இந்திரத் திருவிழாவையொட்டி வேத பாராயணம் நடைபெறுகிறது.

இக்கோயிலில் இந்திரத் திருவிழா மாா்ச் 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், திருவெண்காடு சுப்பிரமணிய கனபாடிகள் வேத பாராயண ரிலிஜியஸ் டிரஸ்ட் சாா்பில் சுவேதாரண்யேஸ்வரா், பிரம்ம வித்யாம்பிகை, அகோரமூா்த்தி மற்றும் நடராஜா் சந்நிதிகளில் டிரஸ்ட் அறங்காவலா் சந்திரன் தலைமையில் காலை மற்றும் மாலை வேளைகளில் வேத பாராயணம் நடைபெறுகிறது.

இதில், 50-க்கும் மேற்பட்ட வேத பண்டிதா்கள் பங்கேற்று ரிக், யஜுா், சாமம் மற்றும் அதா்வண வேதங்களை பாராயணம் செய்து வருகின்றனா். மேலும், இந்த டிரஸ்ட் சாா்பில் அகோர அஸ்தர ஹோமம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com