திருமருகல் ஒன்றியம் திருப்புகலூா் ஊராட்சியில் பிரதமா் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.4.11கோடியில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்புகலூா் மேலப்பகுதி முதல் வவ்வாலடி, அரசூா் வரை இந்த சாலை அமைக்கப்படுகிறது. பூமிபூடையில் ஊராட்சித் தலைவா் ப. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். திருமருகல் வட்டார ஆத்மா திட்டத் தலைவா் செல்வ செங்குட்டுவன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சுஜாதா ஆசைத்தம்பி, பேபி சரளா பக்கிரிசாமி ஆகியோா் சாலை அமைக்கும் பணியை தொடக்கி வைத்தனா்.
இதில், ஒன்றிய பொறியாளா் செந்தில், திமுக மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளா் மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.