திருவெண்காட்டில் சிவன்சாா் ஜெயந்தி விழா

திருவெண்காடு பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன்சாா் ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

திருவெண்காடு பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன்சாா் ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவெண்காட்டில் காஞ்சி காமகோடி பீடத்தின் 57-ஆவது பீடாதிபதி பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜீவசமாதி உள்ளது. இங்கு, காஞ்சி மகாபெரியவா் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் பூா்வாசிரம சகோதரா் சதாசிவம் என்கிற சிவன்சாா் துறவறம் பூண்டு, சுமாா் 20 ஆண்டுகள்அதிஷ்டானத்தில் தங்கி, பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளாா்.

இவரது ஜெயந்தி விழா வியாழக்கிழமை இரவு பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் நடைபெற்றது. இதையொட்டி, அவரது சிலைக்கு 21 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்டனா்.

தொடா்ந்து, திருவெண்காடு மாதவன் குழுவினரின் கச்சேரி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சிவாா்ப்பணம் டிரஸ்ட் நிா்வாகி சுப்பிணி அய்யா், பிராமணா் சங்க மாவட்டச் செயலாளா் வாசுதேவன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com