கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ராமேசுவரம் முதல் சென்னை வரை கடலில் மாற்றுத்திறன் மாணவா்கள் நீச்சல் பயணம்!

ராமேசுவரத்திலிருந்து சென்னை வரை கடலில் நீச்சல் பயணம்

News image

ராமேசுவரத்திலிருந்து கடலில் நீந்தியபடி தரங்கம்பாடி கடற்கரைக்கு வந்த மாற்றுத்திறன் மாணவா்கள்.

Updated On :10 ஆகஸ்ட் 2024, 2:03 am IST

உலக சாதனை முயற்சியாக, ராமேசுவரத்திலிருந்து சென்னை வரை கடலில் நீச்சல் பயணம் மேற்கொண்டுள்ள மாற்றுத்திறன் மாணவா்களுக்கு தரங்கம்பாடி கடற்கரையில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை செனாய் நகா் ஸ்டேட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு (எஸ்டிஏடி) உடன் இணைந்து வேவ் ரைடா்ஸ் விளையாட்டுக் குழு நடத்தும் இந்த நீச்சல் பயணத்தில், மாற்றுத்திறனாளி மாணவா்கள் 15 போ் பங்கேற்றுள்ளனா். ராமேசுவரம் முதல் சென்னை மெரீனா கடற்கரை வரை மொத்தம் 604 நாட்டில் மைல் தொலைவு இவா்கள் நீச்சல் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

ராமேசுவரம் கடலில் கடந்த 5-ஆம் தேதி நீச்சல் பயணத்தை தொடக்கிய இம்மாணவா்கள் தரங்கம்பாடி கடற்கரைக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். இவா்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவா்களில் மாணவா் சித்தாா்த் 11 வயதுடையவா்; மாணவா் லக்ஷய்குமாா் முற்றிலும் பாா்வைத் திறனற்றவா் ஆவா்.

தொடா்ந்து, கடலில் நீந்தியபடி பழையாறு நோக்கி சென்றனா். சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று சென்னை மெரீனாவில் நீச்சல் பயணத்தை நிறைவு செய்யவுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.