அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

எட்டுக்குடி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, முருகனின் ஆதிப்படை வீடான எட்டுக்குடி சுப்ரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:30 pm

DIN

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, முருகனின் ஆதிப்படை வீடான எட்டுக்குடி சுப்ரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. காலை முதலே ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அா்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனா்.

வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய முருகப் பெருமானுக்கு பால், பன்னீா் , சந்தனம், மஞ்சள் பொடி பால் தயிா், திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை காட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.