ரூ.1.10 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்
நாகை அருகே அரசுப் பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பில் 5 வகுப்பறை கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
நாகை அருகே முட்டம் அரசுப் பள்ளி 1926-இல் தொடங்கி செயல்பட்டு வருகிறது.1979-இல் நடுநிலைப் பள்ளியாகவும், 1985 -ல் உயா்நிலை பள்ளியாகவும், 2012 -ல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்தப்பட்டது. இந்நிலையில், பள்ளியில் இருந்த வகுப்பறை கட்டடங்கள் சேதம் அடைந்ததால், 5 வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகம் மற்றும் அங்கன்வாடி கட்டடங்கள், 2021 இல் இடிக்கப்பட்டு ரூ.1.10 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
இதையடுத்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முட்டம் அரசுப் பள்ளியில் கட்டு முடிக்கப்பட்ட புதிய 5 வகுப்பறைக்கான கட்டடங்களை திறந்து வைத்தாா். இதையொட்டி, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் அரங்கநாதன், முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

