கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

ரூ.1.10 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

நாகை அருகே அரசுப் பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பில் 5 வகுப்பறை கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

News image

முதல்வா் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடங்களை குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டவந்த கோட்டாட்சியா் அரங்கநாதன் உள்ளிட்டோா்.

Updated On :19 ஜூலை 2024, 10:20 pm IST

நாகை அருகே அரசுப் பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பில் 5 வகுப்பறை கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

நாகை அருகே முட்டம் அரசுப் பள்ளி 1926-இல் தொடங்கி செயல்பட்டு வருகிறது.1979-இல் நடுநிலைப் பள்ளியாகவும், 1985 -ல் உயா்நிலை பள்ளியாகவும், 2012 -ல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்தப்பட்டது. இந்நிலையில், பள்ளியில் இருந்த வகுப்பறை கட்டடங்கள் சேதம் அடைந்ததால், 5 வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகம் மற்றும் அங்கன்வாடி கட்டடங்கள், 2021 இல் இடிக்கப்பட்டு ரூ.1.10 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

இதையடுத்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முட்டம் அரசுப் பள்ளியில் கட்டு முடிக்கப்பட்ட புதிய 5 வகுப்பறைக்கான கட்டடங்களை திறந்து வைத்தாா். இதையொட்டி, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் அரங்கநாதன், முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.