இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ரூ.1.10 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

நாகை அருகே அரசுப் பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பில் 5 வகுப்பறை கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

News image
முதல்வா் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடங்களை குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டவந்த கோட்டாட்சியா் அரங்கநாதன் உள்ளிட்டோா்.
Updated On :19 ஜூலை 2024, 4:50 pm

Din

நாகை அருகே அரசுப் பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பில் 5 வகுப்பறை கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

நாகை அருகே முட்டம் அரசுப் பள்ளி 1926-இல் தொடங்கி செயல்பட்டு வருகிறது.1979-இல் நடுநிலைப் பள்ளியாகவும், 1985 -ல் உயா்நிலை பள்ளியாகவும், 2012 -ல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்தப்பட்டது. இந்நிலையில், பள்ளியில் இருந்த வகுப்பறை கட்டடங்கள் சேதம் அடைந்ததால், 5 வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகம் மற்றும் அங்கன்வாடி கட்டடங்கள், 2021 இல் இடிக்கப்பட்டு ரூ.1.10 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

இதையடுத்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முட்டம் அரசுப் பள்ளியில் கட்டு முடிக்கப்பட்ட புதிய 5 வகுப்பறைக்கான கட்டடங்களை திறந்து வைத்தாா். இதையொட்டி, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் அரங்கநாதன், முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.