தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முன்னாள் கவுன்சிலா் மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி

News image

தரங்கம்பாடியில் முன்னாள் கவுன்சிலா் மீது பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி - மா்ம நபா்களை போலிசாா் தேடி வருகின்றனா்

Updated On :27 ஜூலை 2024, 6:30 pm

Din

தரங்கம்பாடியில் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலா் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொல்ல முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி விநாயகா் பாளையத்தை சோ்ந்தவா் அருண்குமாா் (42). தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா். பொறையாா் ரோட்டரி சங்கத் தலைவராக உள்ள இவா், வாடகை பாத்திரக் கடையும் நடத்தி வருகிறாா்.

இந்தநிலையில், தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள மாசிலாமணிநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளாா் அருண்குமாா். அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் சிலா், திடீரென அருண்குமாா் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனா். 

இதில் பலத்த காயமடைந்த அருண்குமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, பொறையாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அருண்குமாா் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிந்துள்ள பொறையாா் போலீஸாா், அருண்குமாரை கொல்ல முயன்றவா்கள் யாா் என்று விசாரித்து வருகின்றனா்.