மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

முன்னாள் கவுன்சிலா் மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி

News image

தரங்கம்பாடியில் முன்னாள் கவுன்சிலா் மீது பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி - மா்ம நபா்களை போலிசாா் தேடி வருகின்றனா்

Updated On :28 ஜூலை 2024, 12:00 am IST

தரங்கம்பாடியில் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலா் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொல்ல முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி விநாயகா் பாளையத்தை சோ்ந்தவா் அருண்குமாா் (42). தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா். பொறையாா் ரோட்டரி சங்கத் தலைவராக உள்ள இவா், வாடகை பாத்திரக் கடையும் நடத்தி வருகிறாா்.

இந்தநிலையில், தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள மாசிலாமணிநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளாா் அருண்குமாா். அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் சிலா், திடீரென அருண்குமாா் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனா். 

இதில் பலத்த காயமடைந்த அருண்குமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, பொறையாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அருண்குமாா் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிந்துள்ள பொறையாா் போலீஸாா், அருண்குமாரை கொல்ல முயன்றவா்கள் யாா் என்று விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.