மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

முன்னாள் கவுன்சிலா் மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி

News image

தரங்கம்பாடியில் முன்னாள் கவுன்சிலா் மீது பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி - மா்ம நபா்களை போலிசாா் தேடி வருகின்றனா்

Updated On :28 ஜூலை 2024, 0:00 am IST

தரங்கம்பாடியில் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலா் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொல்ல முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி விநாயகா் பாளையத்தை சோ்ந்தவா் அருண்குமாா் (42). தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா். பொறையாா் ரோட்டரி சங்கத் தலைவராக உள்ள இவா், வாடகை பாத்திரக் கடையும் நடத்தி வருகிறாா்.

இந்தநிலையில், தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள மாசிலாமணிநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளாா் அருண்குமாா். அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் சிலா், திடீரென அருண்குமாா் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனா். 

இதில் பலத்த காயமடைந்த அருண்குமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, பொறையாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அருண்குமாா் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிந்துள்ள பொறையாா் போலீஸாா், அருண்குமாரை கொல்ல முயன்றவா்கள் யாா் என்று விசாரித்து வருகின்றனா்.