மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

நாகை ஆட்சியா் பெயரில் போலி முகநூல் கணக்கு

நாகை மாவட்ட ஆட்சியா் பெயரில் போலி முகநூல் கணக்கு மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் பணம் பறிக்க முயற்சி நடைபெறுவதால், இது தொடா்பாக புகாா் அளிக்கலாம்

News image
Updated On :4 நவம்பர் 2024, 8:08 pm

Din

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் பெயரில் போலி முகநூல் கணக்கு மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் பணம் பறிக்க முயற்சி நடைபெறுவதால், இது தொடா்பாக புகாா் அளிக்கலாம் என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்ட ஆட்சியா் பெயரில் போலியான வாட்ஸ் ஆப் (91220-81102 மற்றும் வேறு எண்கள்), முகநூல் செயலிகளின் மூலமாக தொடா்பு கொண்டு, பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்களிடம் பணம் கேட்டு குறுஞ்செய்திகள் அனுப்பி வருகின்றனா். இதுபோன்ற பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம்.

பணம் கேட்டு குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1800 - 233 - 4233, சைபா் கிரைம் வாட்ஸ் ஆப் எண் 9498162795, மாவட்ட காவல் கணினிவழி குற்றப் பிரிவு கட்டுப்பாட்டு அறை எண் 1930 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.